என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழியில் வருகிற 21-ந்தேதி அனைத்து ரெயில்களும் நின்று செல்ல கோரி கடையடைப்பு- ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்9 Sep 2021 10:16 AM GMT (Updated: 9 Sep 2021 10:16 AM GMT)
சீர்காழியில் பலகாலமாக நின்று சென்ற பயணிகள் ரெயில்கள், கோவிட் 19 பிறகு நிற்காமல் செல்வதாக ரெயில் உபயோகிப்பாளர் சங்க சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர் சங்க சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் அதன் தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நகர வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், பகுதி செயலாளர் இந்திரஜித், வர்த்தக நல சங்க தலைவர் கோபு, சீர்காழி தாலுக்கா மொபைல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் மார்க்ஸ்பிரியன் செயலாளர் ஞானமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழுதுகள் இயக்கத் தலைவர் ஷரவணன், நலம் அறக்கட்டளை செயலாளர் சுதாகர், ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, சீர்காழியில் பலகாலமாக நின்று சென்ற பயணிகள் ரெயில்கள், கோவிட் 19 பிறகு நிற்காமல் செல்கிறது. இதனால் சீர்காழி வாழ் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என கருத்துக்களை கூறினர்.
இதனிடையே பலமுறை ரெயில்வே நிர்வாகத்திற்கு நேரிலும், கடிதம், மின்னஞ்சல் மூலம் தெரியபடுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதாலும், அனைத்து ரெயில்களும் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசை வலியுறுத்தி ரெயில்நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அனைத்து வணிகர்களும் கடையடைப்பு செய்வது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. நிறைவில் செயலாளர் முஸ்தபா நன்றி கூறினார்.
சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர் சங்க சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் அதன் தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நகர வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், பகுதி செயலாளர் இந்திரஜித், வர்த்தக நல சங்க தலைவர் கோபு, சீர்காழி தாலுக்கா மொபைல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் மார்க்ஸ்பிரியன் செயலாளர் ஞானமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழுதுகள் இயக்கத் தலைவர் ஷரவணன், நலம் அறக்கட்டளை செயலாளர் சுதாகர், ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, சீர்காழியில் பலகாலமாக நின்று சென்ற பயணிகள் ரெயில்கள், கோவிட் 19 பிறகு நிற்காமல் செல்கிறது. இதனால் சீர்காழி வாழ் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என கருத்துக்களை கூறினர்.
இதனிடையே பலமுறை ரெயில்வே நிர்வாகத்திற்கு நேரிலும், கடிதம், மின்னஞ்சல் மூலம் தெரியபடுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதாலும், அனைத்து ரெயில்களும் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசை வலியுறுத்தி ரெயில்நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அனைத்து வணிகர்களும் கடையடைப்பு செய்வது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. நிறைவில் செயலாளர் முஸ்தபா நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X