என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தினமும் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

    பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டால் அதை தீர்க்க தேவையான அனைத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மக்கள் தொகை 12 லட்சத்து 15 ஆயிரத்து 778 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சத்து 94 ஆயிரத்து 204 பேர் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 827 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. எஞ்சிய மக்களுக்கு வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தவேண்டும்.

    இப்பணிகளை முழுக்க முழுக்க உள்ளாட்சி அமைப்புகள் முன்னின்று மேற்கொள்ள வேண்டும்.

    அரக்கோணம் வட்டத்தில் குறைவான சதவீதம் உள்ளது. அப்பகுதியில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம பகுதிகளில் தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்கு அதிக அளவில் செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்புகளை ஆட்டோக்களில் தெரிவிக்க வேண்டும்.

    பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டால் அதை தீர்க்க தேவையான அனைத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். வரும் வாரங்களில் கட்டாயமாக கிராமப் பகுதி, நகரப்பகுதி அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் சதவீதம் அதிகரிக்க அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து பணியாற்றிட வேண்டும். அலுவலர்கள் இப்பணியில் யாரும் மெத்தனம் காண்பிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×