search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    விருதுநகரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை கண்டித்து விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    விருதுநகர்:

    தமிழ்நாடு அனைத்து போக்குவரத்து கழக சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை கண்டித்து விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று அதிகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தொ.மு.ச.மண்டல பொதுச்செயலாளர் ராஜசெல்வம் தலைமை தாங்கினார். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., வங்கி, காப்பீடு, ரெயில்வே , நிலக்கரி சுரங்கம், இந்திய பாதுகாப்புத்துறை தொழிற்சாலை மற்றும் சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தினால் அனைத்து அரசு பஸ்களும் தாமதமாக கிளம்பிச் சென்றன.

    தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் மாடசாமி, ஏ.ஐ.யு.சி . மத்திய துணை செயலாளர் மூர்த்தி, சி.ஐ.டி.யு. கிளைச் செயலாளர் பாண்டி, ஐ. என். டி. யு. சி. கிளைச் செயலாளர் மாரீஸ்வரன் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×