என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
மயிலாடுதுறை அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை நீக்கியதை கண்டித்து சி.ஐ.டி.யூ. மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலை முன்பு கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை நீக்கியதை கண்டித்து சி.ஐ.டி.யூ. மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.
செயலாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சீனி.மணி, மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் குத்தாலம் தாலுகா கருப்பூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சுமைதூக்கும் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கியதை கண்டித்தும், பணியிலிருந்து நீக்கப்பட்ட சுமைத்தூக்கும் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கருப்பூர் கிளை பொறுப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
Next Story






