search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுச்சேரியில் 1-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

    புதுச்சேரியில் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது கொரோனாவின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

    கர்நாடக மாநிலத்தில் இன்று 9 முதல் 12-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. இதனைத்தொடர்ந்து வருகிற 1-ந்தேதியில் இருந்து புதுச்சேரி மாநிலத்திலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×