search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    இரணியல் அருகே அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகை கொள்ளை

    இரணியல் அருகே அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இரணியல்:

    இரணியல் அருகே ஆலங்கோடு சரல்விளை பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை இருவேளைகளில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து கோவில் நடைகளை பூட்டி விட்டு பூசாரி சென்றார். நேற்று காலை கோவிலுக்கு வந்தபோது கோவிலின் கதவு, உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அம்மன் கழுத்தில் கிடந்த 4 கிராம் செயின் மற்றும் 4 கிராம் எடையுள்ள தங்க பொட்டுக்கள் அம்மன் காலில் கிடந்த 2 கொலுசுகள் திருடப்பட்டிருந்தது. மேலும் பித்தளை பொருட்களையும் மர்மநபர்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.

    கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    கொள்ளை சம்பவம் குறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே பழைய கொள்ளையர்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×