என் மலர்
செய்திகள்

கொள்ளை
மகாகாளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
மகாகாளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை 2-வது புதுத்தெருவில் உள்ள மகாகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்தன. இதனை கண்ட அந்தபகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி அண்ணா நகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் காளிதாஸ் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து காளிதாசனை கைது செய்த மயிலாடுதுறை போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






