என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாலிகட்ட முயன்றதால் சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் போக்சோவில் கைது
Byமாலை மலர்7 Aug 2021 1:40 PM GMT (Updated: 7 Aug 2021 1:40 PM GMT)
விக்கிரமங்கலம் அருகே தாலிகட்ட முயன்றதால் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முனியன்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது 20). நேற்று முன்தினம் இவர், 17 வயது சிறுமிக்கு தாலி கட்ட முயன்றதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பித்துச்சென்ற சிறுமி, விஷ செடியை தின்று மயங்கி கிடந்தார். இதைக்கண்டவர்கள் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விக்கிரமங்கலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி, சிறுமியை கட்டாயப்படுத்தி தாலி கட்ட முயற்சி செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X