என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுராந்தகம் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காலை பிடித்து இழுத்ததால் தகராறு - தொழிலாளி கைது
Byமாலை மலர்25 July 2021 11:56 AM GMT (Updated: 25 July 2021 11:56 AM GMT)
மதுராந்தகம் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காலை பிடித்து இழுத்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாதூர் ஊராட்சியில் வசிதது வந்த 30 வயது பெண் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி புருஷோத்தமன் (38) அங்கு தூங்கி கொண்டிருந்த அந்த பெண்ணின் காலை பிடித்து இழுத்தாக தெரிகிறது. அவர் இது குறித்து அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் புருஷோத்தமன் தாக்கியதில் அவரது கணவர் மயக்கம் அடைந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த புருஷோத்தமன் ஆம்புன்சுக்கு தகவல் தெரிவித்தவர் மற்றும் அவரது தாயை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து சித்தாமூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்து செய்யூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X