என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி
    X
    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி

    விருதுநகர் அரசு மருத்துவமனையில் 85 மருத்துவ பணியிடங்கள்

    தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பணிக்கு மருத்துவப்பணியிடங்கள் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    5 நுண் கதிர்வீச்சாளர், 10 டயாலிசிஸ் டெக்னீசியன், 15 இ.சி.ஜி. டெக்னீசியன், 5 சி.டி. ஸ்கேன் டெக்னீசியன், 15 மயக்கவியல் நிபுணர், 5 ஆய்வக நுட்பனர், 5 மருந்தாளுனர், 15 செவிலியர், 11 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் ஆக மொத்தம் 85 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

    பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் பணி வரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரமாக்கவோ வாய்ப்பில்லை.

    உரிய கல்வி தகுதி சான்றிதழுடன் முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், ராமமூர்த்தி ரோடு, விருதுநகர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி ஆகும்.

    தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். 4-ந் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×