என் மலர்
செய்திகள்

போராட்டம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் நூதன ஆர்ப்பாட்டம்
புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுதேசி மில் அருகில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுதேசி மில் அருகில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைமை பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். நகர்ப்புற பொதுச்செயலாளர் ராஜன், கிராமப்புற பொதுச்செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன், அய்யப்பன், ஆனந்து, மலர்விழி, ரூபன் தாஸ், ருத்தரகுமார், சோம நாதன், சக்திவேல் மற்றும் அணி நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாகனத்திற்கு 100 ரூபாய் அச்சிடப்பட்ட மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்வது போல் சங்கு ஊதினர். முடிவில், பிராங்கிளின் பிரான்சுவா நன்றி கூறினார்.
Next Story






