என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி பெண் பலி
அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
அச்சரப்பாக்கம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா, சோகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). அவரது மனைவி ஜெயந்தி (38). இருவரும் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்னை சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜெயந்தி (38) சம்பவ இடத்திலேயே பலியானர். ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமுகத்தை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






