என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம்
    X
    முக கவசம்

    நாளை முதல் பஸ்கள் இயக்கம்: பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயம்- கலெக்டர்

    கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக நாளை (திங்கட்கிழமை) முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக நாளை (திங்கட்கிழமை) முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட்., விருதுநகர் மண்டலம் மூலம் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நாளை காலை 6 மணிமுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மற்றும் மயிலாடு துறை உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பஸ்களை இயக்க ஏதுவாக அனைத்து பஸ்களுக்கும் கிருமிநாசினி அடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    மேலும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். தமிழக அரசு ஆணைப்படி விருதுநகர் மாவட்டத்தில் இயக்கப்படும் சாதாரண நகர பஸ்களில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்ய கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் பாதுகாப்பான பொது போக்குவரத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
    Next Story
    ×