என் மலர்
செய்திகள்

ஊரடங்கினால் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேங்கிக்கிடக்கும் சேலை ரகங்கள்.
அருப்புக்கோட்டையில் ஊரடங்கால் தேங்கி கிடக்கும் சேலைகள்
அருப்புக்கோட்டையில் ஊரடங்கினால் சேலைகள் விற்க முடியாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் வாழ்வாதாரம் இழந்து தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டத்தில் நெசவுக்கு, ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்ற ஊராக அருப்புகோட்டை திகழ்கிறது. இங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யும் சேலைகள் குஜராத், ஒரிசா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு கடந்த 40 நாட்களுக்கு மேலாக நெசவுத்தறி கூடங்கள் மற்றும் ஜவுளிக்கடைகளை திறக்க அனுமதி மறுத்துள்ளது.
இதனால் அருப்புக்கோட்டையில் உற்பத்தி செய்யப்பட்ட சேலை ரகங்கள் ஜவுளிக்கடைகள் மூடியதால் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றன. கோடிக்கணக்கான சேலைகள் தேங்கி கிடப்பதால் நெசவு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
எனவே ஜவுளி கடைகளை உடனே திறந்து தேங்கி கிடக்கும் சேலைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இவர்கள் தயாரித்த சேலை ரகங்களை விற்க முடியாமலும், தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாமலும், நெசவு செய்த கூலித் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமலும் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவு கூலித்தொழிலாளர்கள் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கினால் நாங்கள் தயாரித்த சேலைகளை விற்க முடியாமல் உள்ளோம். எனவே ஜவுளிக்கடைகளை உடனே திறந்து ஜவுளி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கூலி நெசவுத்தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கியது போல் இந்த ஆண்டும் வழங்க வேண்டும். மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைத்து அதன்மூலம் ஓய்வூதிய திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை, உற்பத்தி செய்த சேலை ரகங்களை விற்பனை செய்ய ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். நூல் வங்கிகள் அமைத்து நெசவாளர்களுக்கு மானிய விலையில் நூல்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நெசவுக்கு, ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்ற ஊராக அருப்புகோட்டை திகழ்கிறது. இங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யும் சேலைகள் குஜராத், ஒரிசா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு கடந்த 40 நாட்களுக்கு மேலாக நெசவுத்தறி கூடங்கள் மற்றும் ஜவுளிக்கடைகளை திறக்க அனுமதி மறுத்துள்ளது.
இதனால் அருப்புக்கோட்டையில் உற்பத்தி செய்யப்பட்ட சேலை ரகங்கள் ஜவுளிக்கடைகள் மூடியதால் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றன. கோடிக்கணக்கான சேலைகள் தேங்கி கிடப்பதால் நெசவு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
எனவே ஜவுளி கடைகளை உடனே திறந்து தேங்கி கிடக்கும் சேலைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இவர்கள் தயாரித்த சேலை ரகங்களை விற்க முடியாமலும், தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாமலும், நெசவு செய்த கூலித் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமலும் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவு கூலித்தொழிலாளர்கள் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கினால் நாங்கள் தயாரித்த சேலைகளை விற்க முடியாமல் உள்ளோம். எனவே ஜவுளிக்கடைகளை உடனே திறந்து ஜவுளி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கூலி நெசவுத்தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கியது போல் இந்த ஆண்டும் வழங்க வேண்டும். மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைத்து அதன்மூலம் ஓய்வூதிய திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை, உற்பத்தி செய்த சேலை ரகங்களை விற்பனை செய்ய ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். நூல் வங்கிகள் அமைத்து நெசவாளர்களுக்கு மானிய விலையில் நூல்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story






