search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வத்திராயிருப்பு அருகே தொழிலாளி வெட்டிக்கொலை - பெண் விவகாரம் காரணமா?

    வத்திராயிருப்பு அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை அடுத்த ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சதுரகிரி. இவரது மகன் சுந்தரமகாலிங்கம் (வயது 22), தேங்காய் உறிக்கும் தொழிலாளி.

    அதே ஊரைச் சேர்ந்தவர் தாமரை (34). இவரும் தேங்காய் உறிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு சுந்தரமகாலிங்கம் கிராமத்துக்கு வந்தபோது அங்கு தாமரை வந்தார்.

    அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த தாமரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுந்தர மகாலிங்கத்தை சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத் திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் சுந்தரமகாலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கூமாபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தாமரையை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அதில், தனது நண்பனின் தங்கையுடன் சுந்தர மகாலிங்கம் தொடர்பு வைத்திருந்தார். இதனை கண்டித்தும் கேட்காததால் நண்பரின் தூண்டுதலின் பேரில் சுந்தரமகாலிங்கத்தை வெட்டிகொலை செய்ததாக தெரிவித்தார்.

    ஆனால் பின்னர், தனது மனைவியுடன் சுந்தரமகாலிங்கம் தவறாக பழகியதால் வெட்டி கொலை செய்ததாக தெரிவித்தார்.

    முன்னுக்கு பின் முரணாக தாமரை பேசி வருவதால் அவர் சொல்வது உண்மைதானா? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×