search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 507 ஆக உயர்வு

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,478 படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது 976 படுக்கைகள் காலியாக உள்ளன. 502 பேர் நோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்,ஜூன்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்து 379 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 41 ஆயிரத்து 344 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    நேற்று மட்டும் 513 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,529 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.

    இம்மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,478 படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது 976 படுக்கைகள் காலியாக உள்ளன. 502 பேர் நோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை மையங்களில் 1,853 படுக்கைகள் உள்ள நிலையில் 286 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,567 படுக்கைகள் காலியாக உள்ளன. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் சூலக்கரை, புதுக்குடி, தாதம்பட்டி, மீசலூர், முண்டலாபுரம், பட்டம்புதூர், சின்ன வாடியூர், என்.ஜி.ஓ காலனி, அல்லம்பட்டி, சூலக்கரை, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் தொம்பக்குளம், மம்சாபுரம், நாச்சியார்புரம், வடமலாபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், கோவிலூர், புனல்வேலி, செவலூர், பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 58 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பட்டியலில் 142 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 3.5 ஆக உள்ளது.
    Next Story
    ×