என் மலர்
செய்திகள்

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற முகாமில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசு நிதி உதவியுடன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை அமைச்சர் கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரதமரின் அவசரகால நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.97.5 லட்சம் மதிப்பீட்டில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் மத்திய ராணுவ அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் செய்து முடித்துள்ளனர். இந்த உற்பத்தி மையம் மூலம் 200 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் வழங்கும் வசதி ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன்உற்பத்தி மையத்தினை கலெக்டர் கண்ணன் தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தட்டுப்பாடில்லாமல் ஆக்சிஜன் கிடைப்பதற்காக வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் இருந்து ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முதலாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ.97.5 லட்சம் மதிப்பீட்டில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் பிற ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன்அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த உற்பத்தி மையத்தில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இந்த மையத்தினை உருவாக்குவதில் செயல்பட்ட 6 என்ஜினீயர்களுக்கு அமைச்சர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், டாக்டர் ரகுராமன், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேந்தன், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தடுப்பூசி இருப்பு குறித்தும், முகாம் ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளியின் வெளியே காத்திருந்த பொதுமக்கள் அனைவரையும் உள்ளே அனுமதித்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்நிலையில் 900 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரதமரின் அவசரகால நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.97.5 லட்சம் மதிப்பீட்டில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் மத்திய ராணுவ அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் செய்து முடித்துள்ளனர். இந்த உற்பத்தி மையம் மூலம் 200 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் வழங்கும் வசதி ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன்உற்பத்தி மையத்தினை கலெக்டர் கண்ணன் தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தட்டுப்பாடில்லாமல் ஆக்சிஜன் கிடைப்பதற்காக வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் இருந்து ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முதலாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ.97.5 லட்சம் மதிப்பீட்டில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் பிற ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன்அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த உற்பத்தி மையத்தில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இந்த மையத்தினை உருவாக்குவதில் செயல்பட்ட 6 என்ஜினீயர்களுக்கு அமைச்சர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், டாக்டர் ரகுராமன், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேந்தன், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தடுப்பூசி இருப்பு குறித்தும், முகாம் ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளியின் வெளியே காத்திருந்த பொதுமக்கள் அனைவரையும் உள்ளே அனுமதித்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்நிலையில் 900 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






