என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்12 Jun 2021 5:29 PM GMT (Updated: 12 Jun 2021 5:29 PM GMT)
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து அரியலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெயங்கொண்டத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷமிட்டனர்.
அரியலூர்:
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அரியலூரில் மேல அக்ரஹார தெருவில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் ஊரடங்கு காலத்தில் அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ, கார், லாரிகள் வைத்து தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வந்து, விலை உயர்வை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதேபோல் ஜெயங்கொண்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கம்பில் கட்டி தூக்கியவாறு நூதன முறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடையார்பாளையம் அருகே முத்துவாஞ்சேரி சாலையில் அரியலூர் தெற்கு ஒன்றிய வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஒன்றிய வட்டார தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மீன்சுருட்டியில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணாதுரை, வட்டார தலைவர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிமடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் பாலு, மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தா.பழூரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முனுசாமி, வட்டாரத் தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செந்துறையில் ஆர்.எஸ்.மாத்தூர் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பழனியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அரியலூரில் மேல அக்ரஹார தெருவில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் ஊரடங்கு காலத்தில் அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ, கார், லாரிகள் வைத்து தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வந்து, விலை உயர்வை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதேபோல் ஜெயங்கொண்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கம்பில் கட்டி தூக்கியவாறு நூதன முறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடையார்பாளையம் அருகே முத்துவாஞ்சேரி சாலையில் அரியலூர் தெற்கு ஒன்றிய வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஒன்றிய வட்டார தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மீன்சுருட்டியில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணாதுரை, வட்டார தலைவர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிமடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் பாலு, மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தா.பழூரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முனுசாமி, வட்டாரத் தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செந்துறையில் ஆர்.எஸ்.மாத்தூர் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பழனியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X