search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் கடத்தி வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள்.
    X
    ரெயிலில் கடத்தி வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள்.

    சாத்தூரில் ரெயிலில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் - 2 பேர் கைது

    சாத்தூரில் வெளிமாநில மது பாட்டில்களை ரெயிலில் கடத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சாத்தூர்:

    சாத்தூருக்கு ரெயிலில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக அம்மாபட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி மற்றும் அம்மாபட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சாத்தூர் ரெயில் நிலையம் அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கையில் ஒரு பையுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் ெரயில்வே கேட் அருகில் திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனையிட்டனர். இதில் அவர்கள் கொண்டு வந்த பையில் வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தன. அவர்கள் ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் சாத்தூர் அருகே உள்ள நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 24) மற்றும் முருகன் (31) என்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 90 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×