என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 9 பேர் பலி

    அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,525 ஆக உயர்ந்துள்ளது.
    அரியலூர்:

    அரியலூரில் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 34, 80, 74, 80, 60, 55 ஆகிய வயதுடைய 6 ஆண்களும், 60, 20, 85 ஆகிய வயதுடைய 3 பெண்களும் என மொத்தம் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் 111 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். இதனால் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் நேற்று மாவட்டத்தில் மொத்தம் 230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,525 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8,876 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,529 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×