என் மலர்
செய்திகள்

பலியான தம்பதிகள்
கொரோனாவுக்கு ரேஷன் கடை ஊழியர் பலி - மனைவியும் இறந்த பரிதாபம்
கொரோனா வைரஸ் தொற்றால் ரேஷன் கடை ஊழியர் மற்றும் அவரது மனைவி பலியான சம்பவம் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் தென்னலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). இவர், திருவெண்காடு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தரமூர்த்தியின் மனைவி கார்த்திகாவும்(38) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதியருக்கு 13 வயதில் பிரியங்கா என்ற மகளும், 10 வயதில் நந்தகுமார் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






