search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாவட்டத்தில் கொரோனா பலி 400-ஐ கடந்தது

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 411 ஆக உயர்ந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 411 ஆக உயர்ந்தது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1098 படுக்கைகள் உள்ள நிலையில் 966 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 132 படுக்கைகள ்காலியாக உள்ளன.

    சிகிச்சை மையங்களில் 1558 படுக்கைகள் உள்ள நிலையில் 949 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 609 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் சூலக்கரை, ஐ.சி.ஏ. காலனி, குப்பாம்பட்டி, அகமதுநகர், ஆர்.ஆர். நகர், பாண்டியன் நகர் பி.காலனி, அல்லம்பட்டி, செவல்பட்டி, கச்சேரி ரோடு, வெள்ளூர், மாத்தி நாயக்கன்பட்டி ரோடு, காந்தி நகர், ஆனிமுத்து பிள்ளையார் கோவில் தெரு, பர்மா காலனி, ஆர்.சி.தெரு, எல்.பி.எஸ். நகர், ஆவலப்ப சாமி கோவில் தெரு, கே.கே. எஸ்.எஸ்.என்.நகர், சின்னபேராலி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மல்லாங்கிணறு, பரளச்சி, புதுக்கோட்டை, வாய்ப் பூட்டான்பட்டி, சேத்தூர், அயன்கொல்லங்கொண்டான், மம்சாபுரம், மல்லி, செவல்பட்டி, மூவரை வென்றான், நடுச்சூரங்குடி, சாத்தூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், வடமலாபுரம், எம்.ரெட்டியபட்டி, தும்மு சின்னம்பட்டி, பூலாஊரணி, சித்து மூன்றடைப்பு, வலையங்குளம், புதூர் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் மாநில பட்டியலில் 586 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×