search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழிலரசி
    X
    எழிலரசி

    புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் பலி

    புதுவையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 37 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த தேவன் என்பவரது மனைவி எழிலரசி (வயது 62) கொரோனா தொற்று பாதிப்புக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மருத்துவ பரிசோதனையில் இவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று காலை எழிலரசி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் புதுவையில் கருப்பு பூஞ்சைக்கு முதல் பலி பதிவாகி உள்ளது.

    புதுவையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 37 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×