என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
பாதுகாப்பு உடை தரமில்லை: புகார் செய்த 3 செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்
தரமற்ற பாதுகாப்பு உடை புதுவையில் வழங்கப்படுவதாகவும், நன்கொடை பெற்று உடையை பெறுகிறோம் என்றும் கவர்னருக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை என்று சுகாதாரத்துறை செவிலியர்கள் சராமரியாக குற்றம் சாட்டினர்.
புதுச்சேரி:
கொரானோ தொற்றால் மருத்துவ அதிகாரி மோகன்குமார், செவிலிய அதிகாரி நிரஞ்சனா, சுகாதார ஆய்வாளர் ஆனந்த், நர்சிங் ஆர்டர்லி ரங்கநாதன், அனுசுயா, வார்டு அட்டெண்டன்ட் மாயகிருஷ்ணன் மற்றும் ஒய்வு பெற்ற பைலேரியா இன்ஸ்பெக்டர் பக்கிரி ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் புதுவை அரசு மீதும் சுகாதாரத்துறை செயலாளர் மீதும் குற்றம் சாட்டி கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் தரமற்ற பாதுகாப்பு உடை (பி.பி.இ. கிட்) புதுவையில் வழங்கப்படுவதாகவும், நன்கொடை பெற்று உடையை பெறுகிறோம் என்றும் கவர்னருக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை என்று சுகாதாரத்துறை செவிலியர்கள் சராமரியாக குற்றம் சாட்டினர்.
பாதுகாப்பு உடை வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த தி.மு.க. வலியுறுத்தியது.
இதையடுத்து பாதுகாப்பு கவச உடையில் குறையிருந்தால் விசாரித்து சரி செய்ய கவர்னர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.
இதனிடேயே பாதுகாப்பு உடை தொடர்பாக புகார் கூறிய செவிலியர்கள் அனுராதா, சாந்தி மற்றும் பாக்கியவதி (புதுவை செவிலியர் சங்கத்தலைவி) ஆகிய 3 பேருக்கும் சுகாதாரத்துறை மெமோ நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் மருத்துவமனைகளுக்கு தரப்பட்டுள்ள பாதுகாப்பு உடையின் தரம் பற்றி புகார் செய்துள்ளீர்கள்.அதுதொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் 48 மணி நேரத்தில் விளக்கம் தரவேண்டும்.
இது மத்திய அரசுக்கும் பாதுகாப்பு உடை தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? என்பதற்கு உதவும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
Next Story






