search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 237 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 21,270 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 21,270 ஆக உயர்ந்துள்ளது. 19,299 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1697 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். நோய் பாதிப்புக்கு இதுவரை 248 பேர் பலியாகி உள்ளனர். 237 பேர் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் பகுதியில் கன்னிசேரி புதூர் வெள்ளூர் முத்துராமன்பட்டி அரசு ஆஸ்பத்திரி செவிலியர் பயிற்சி பள்ளி, வ.உ.சி. நகர், கே. கே.எஸ்.எஸ்.என். நகர், காந்திபுரம் தெரு, என்.ஜி.ஒ. காலனி, அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, புல்லலக்கோட்டை கண்ணதாசன் தெரு, லட்சுமி நகர், பிபிரோடு, சண்முகம் தெரு, தங்கமணி காலனி, மணிநகரம், செந்தி விநாயகபுரம் தெரு, ஆனைக்குழாய் தெரு, கந்தபுரம்தெரு, லட்சுமிநகர், கருப்பசாமிநகர், ரோசல்பட்டி ரோடு, மல்லி கிட்டங்கி தெரு, கசாப்புக் காரர் தெரு, ஆர். ஆர். நகர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் 25 பேர் மற்றும் குப்பாம்பட்டி, கன்னிசேரி புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிவகாசி ஆலமரத்துப்பட்டி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, பந்தல்குடி, சாத்தூர், நரிக்குடி, திருச்சுழி, மறவர் ெபருங்குடி, பூலாங்கால், எம்.ரெட்டியபட்டி, தும்முசின்னம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×