என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூரில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
Byமாலை மலர்1 May 2021 12:31 PM GMT (Updated: 1 May 2021 12:31 PM GMT)
அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
இந்த போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஆன்லைன் பணமோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆன்லைன் குற்றங்களை புகாராக அளிக்கலாம். மேலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து புகாரை பெற்றார். அந்த புகார் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் திருமேனி, சேகர், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், தனி பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X