search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருபுவனை அருகே நோய் கொடுமையால் பெண் எலி மருந்து தின்று தற்கொலை

    திருபுவனை அருகே நோய் கொடுமையால் பெண் எலி மருந்து தின்று தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவுரி (வயது33). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென இறந்து போனார். இதனால் கவுரி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கவுரிக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து, மாத்திரைகளும் வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    சம்பவத்தன்று கவுரிக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த கவுரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை கவுரி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தாய் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×