search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பஸ் கண்டக்டர் பலி

    வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    உளுந்தூர்பேட்டை அருகே திருப்பெயர் கிராமம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறது.

    இவரது மகன் அரவிந்த (வயது24). இவர் புதுவையில் உள்ள தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    புதுவையில் 4 நாட்கள் பஸ்சில் பணிபுரிந்து விட்டு அரவிந்த் ஓய்வு எடுக்க வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று மாலை அரவிந்த் பணி முடிந்து கணக்கு, வழக்குகளை ஒப்படைக்க மோட்டார் சைக்கிளில் பஸ் அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தார்.

    வில்லியனூர் சுல்தான் பேட்டையில் தனியார் கோழி இறைச்சிக்கடை அருகே வந்த போது அந்தவழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக அரவிந்த் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்த் தலையில் பலத்த காயமடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அரவிந்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அரவிந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×