என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் கேபிள் டி.வி. அதிபர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்22 April 2021 2:50 PM GMT (Updated: 22 April 2021 2:50 PM GMT)
விருதுநகர் கேபிள் டி.வி. அதிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் பி.பி.வையாபுரி தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 44). விருதுநகரில் கேபிள் டி.வி. நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது ஆபாச படங்களை அவரது கணவரான ெதாழிலதிபருக்கு செல்போன் மூலம் அனுப்பியதுடன், அந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமலிருக்க ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பிரேம்குமார் தொடர் சைபர் குற்றங்களை மேற்கொண்டதாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் கண்ணன் கேபிள் டி.வி. அதிபர் பிரேம்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து விருதுநகர் கிழக்கு போலீசார் பிரேம்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X