என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு
Byமாலை மலர்19 April 2021 2:22 AM GMT (Updated: 19 April 2021 2:22 AM GMT)
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 31 அடியில் இருந்து 2 அடி உயர்ந்து 33.73 அடியாக உள்ளது.
அதேபோல கோவிலாறு அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உயர்ந்து உள்ளது. தற்போது பிளவக்கல் பெரியாறு அணைக்கு 0.08 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
வத்திராயிருப்பு சுற்றி உள்ள 40 கண்மாய்களில் 15 கண்மாய்களில் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், 15 கண்மாய்களில் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், மீதமுள்ள 10 கண்மாய்களில் 20 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் மூலம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் தங்களது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.
வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 31 அடியில் இருந்து 2 அடி உயர்ந்து 33.73 அடியாக உள்ளது.
அதேபோல கோவிலாறு அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உயர்ந்து உள்ளது. தற்போது பிளவக்கல் பெரியாறு அணைக்கு 0.08 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
வத்திராயிருப்பு சுற்றி உள்ள 40 கண்மாய்களில் 15 கண்மாய்களில் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், 15 கண்மாய்களில் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், மீதமுள்ள 10 கண்மாய்களில் 20 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் மூலம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் தங்களது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X