என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் - அதிகாரி உத்தரவு
Byமாலை மலர்12 April 2021 10:48 PM GMT (Updated: 12 April 2021 10:48 PM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
கொரோனா பாதிப்பை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் தலைமை தாங்கினார்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள 76 ரேஷன் கடைகளை சேர்ந்த 52-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும்.
அதே போல் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் கைரேகை பதித்து பொருட்கள் வழங்க வேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வரும்போது அவர்களுடைய ரேகை பதிவு ஆகா விட்டால் கூட பதிவேடு மூலம் கையெழுத்து பெற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 100 சதவீத கைரேகை பதித்து பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் கூறியதாவது:- கொேரானா பரவலை தடுக்கும் வகையில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா பாதிப்பை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் தலைமை தாங்கினார்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள 76 ரேஷன் கடைகளை சேர்ந்த 52-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும்.
அதே போல் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் கைரேகை பதித்து பொருட்கள் வழங்க வேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வரும்போது அவர்களுடைய ரேகை பதிவு ஆகா விட்டால் கூட பதிவேடு மூலம் கையெழுத்து பெற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 100 சதவீத கைரேகை பதித்து பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் கூறியதாவது:- கொேரானா பரவலை தடுக்கும் வகையில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X