search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 631 பேர் பாதிப்பு

    மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 792 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 56 ஆயிரத்து 170 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 631 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 792 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 56 ஆயிரத்து 170 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 844-ஆக உயர்ந்தது. 3,778 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 206 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 30 ஆயிரத்து 446 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 467 பேர் உயிரிழந்துள்ளனர். 1030 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். .இதுவரை மாவட்டம் முழுவதும் 48 ஆயிரத்து 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 898 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1579 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 723 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.
    Next Story
    ×