என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்8 April 2021 2:23 PM GMT (Updated: 8 April 2021 2:23 PM GMT)
விருதுநகரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்காபுரத்தில் இருந்து விருதுநகருக்கு நேற்று காலை அரசு போக்குவரத்து கழக பஸ் வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ்சை பட்டம்புதூரை சேர்ந்த டிரைவர் ராமர் ஓட்டி வந்தார். இந்த பஸ் விருதுநகர்- சாத்தூர் ரோட்டில் மேல சின்னையாபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த ராமர் (வயது 27) என்பவர் பஸ்சை நிறுத்துமாறு சைகை காட்டினார்.
பஸ் சிறிது தூரம் தாண்டி நிறுத்தப்பட்டதால் ராமர் வேகமாக ஓடி வந்து பஸ்சில் ஏறினார். பஸ் விருதுநகர் பழைய பஸ் நிலையம் வந்தடைந்தது.
இந்நிலையில் அப்போது திடீரென பஸ் டிரைவர் இருக்கைக்கு பின்புறம் அமர்ந்திருந்த ராமர், டிரைவர் ராமரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் வாலிபர் ராமரை பிடித்து பஸ்நிலைய புறக்காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.அதனை தொடர்ந்து போலீசார், ராமரை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதனையடுத்து போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ராமர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், வாலிபர் ராமர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X