search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செவல்பட்டியில் மிளகாய் வத்தலை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள்.
    X
    செவல்பட்டியில் மிளகாய் வத்தலை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள்.

    மிளகாய் வத்தலுக்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லை - விவசாயிகள் கவலை

    மிளகாய் வத்தலுக்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி, லட்சுமியாபுரம், தாயில்பட்டி, பூசாரி நாயக்கன் பட்டி, சல்வார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 30 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் வத்தல் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாததால் மிளகாய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    வெம்பக்ேகாட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் ஏக்கருக்கு 15 குவிண்டால் வரை தான் விளைச்சல் கிடைத்துள்ளது. அதேபோல சென்ற ஆண்டு குவிண்டால் ரூ.9,000 முதல் ரூ.9,500 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ரூ. 13,000 முதல் ரூ.14,000 விற்பனையாகிறது.

    விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    தற்ேபாது போதுமான அளவு தண்ணீர் இல்லாததாலும், கடுமையான வெயில் காரணமாகவும் மிளகாயில் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் விளைச்சல் குறைவுக்கு ஒரு காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×