என் மலர்
செய்திகள்

செந்துறையில் நடந்த பிரசார கூட்டத்தில் கி.வீரமணி பேசிய போது எடுத்த படம்.
அ.தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் - கி.வீரமணி பேச்சு
அ.தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் குன்னம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது;-
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போன்ற கூட்டணி பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி. கொரோனாவுக்கு தடுப்பூசி போன்றது தமிழகத்திற்கு தி.மு.க. ஆட்சி. அதற்கு தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். சினிமா நடிகர்கள் போன்று ஒவ்வொருவர் வருவார்கள். அதனை நம்பி ஏமாந்து விடாதீர்கள். நம்முடைய வாழ்வுரிமைக்காக, கல்வி உரிமைக்காக, பெண்ணுரிமைக்காக, மனித உரிமைக்காக போராடும் கட்சி தி.மு.க.தான்.
மே 2-ந் தேதி ஸ்டாலின்தான் கோட்டையில் கொடி ஏற்றப்போகிறார். அதன்பிறகு ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களை மட்டும் மீட்டெடுக்க போவதில்லை. பா.ஜ.க.வில் அடகு வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வையும் மீட்டெடுக்க போகிறார்.
இதேபோல் அரியலூர் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து, அரியலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கி.வீரமணி பேசுகையில், தமிழகத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் என்பது தெரிகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியால் பாதிக்கப்படாத மக்கள் யாருமில்லை. மதவெறி, சாதி வெறியை வெளியேற்றவே தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.
தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி பா.ஜ.க. ஆனால் நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என்று அமித்ஷா சொன்னபோது, அ.தி.மு.க. தரப்பில் மறுத்து பேச முடியவில்லை. ஏன் என்றால் அ.தி.மு.க. மடியில் கணம், வழியில் பயம் என உள்ளது. நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் உயிர்பலி தொடர்கிறது. அதை தடுக்க ஏன் நடவடிக்கை இல்லை. செவிலியர் படிப்புக்கும் தற்போது நீட் தேர்வு. குலகல்வியை எதிப்பது எங்கள் அணி, என்றார்.
Next Story






