என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தேர்தல் பணிக்கு வந்த வடமாநில அதிகாரிக்கு கொரோனா - உதவி அதிகாரிக்கும் பாதிப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் செலவின பார்வையாளராக நர்சிங்குமார் கால்கோ நியமனம் செய்யப்பட்டார்.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதி தேர்தல் பணிக்கு வந்த வடமாநில அதிகாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது உதவி அதிகாரிக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் செலவின பார்வையாளராக நர்சிங்குமார் கால்கோ (வயது 40) நியமனம் செய்யப்பட்டார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆவார்.

    இவர் கடந்த 18-ந் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இவரது உதவி அதிகாரியாக கருவூலத்துறை கண்காணிப்பாளர் முருகன் நியமிக்கப்பட்டு இருந்தார். அவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ததில் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    ஆனால் இவருக்கு அறிகுறி ஏதும் இல்லாத நிலையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அருப்புக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
    Next Story
    ×