என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட 30 பவுன் நகைகளை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட 30 பவுன் நகைகளை படத்தில் காணலாம்.

    சீர்காழி அருகே காரில் கொண்டு சென்ற 30 பவுன் நகை பறிமுதல்

    சீர்காழி அருகே காரில் கொண்டு சென்ற 30 பவுன் நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கிய சகாயம் தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    அந்த காரில் இருந்த ஒரு பையில் 30 பவுன் நகைகள் இருந்தது தெரிய வந்தது. அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்த நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் ஹரிஹரனிடம் ஒப்படைத்தனர். அந்த நகைகளுக்கான உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு நகைகளை பெற்றுச்செல்லுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×