என் மலர்
செய்திகள்

கைது
தலைமறைவாக இருந்த பெண் தாதா எழிலரசி கைது
பணம் கேட்டு மிரட்டல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பெண் தாதா எழிலரசியை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தொழில் அதிபரான இவரது 2-வது மனைவி எழிலரசி (வயது 45). இவர் காரைக்கால் நேதாஜிநகரில் வசித்து வருகிறார். எழிலரசி மீது, முன்னாள் அமைச்சர் சிவக்குமார், ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா, திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரை கூலிப் படையை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் பெண் தாதாவாக அவர் வலம் வந்தார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு எழிலரசி, விக்ரமன் ஆகியோர் காரைக்கால் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டினர். இதுதவிர ராதாகிருஷ்ணனின் முதல் மனைவியின் மகன் அஜேஸ்ராமுவை மிரட்டி மதுபான கடை ஒன்றை வாங்கிய வழக்கும் உள்ளது. இந்த வழக்குகளில் எழிலரசி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் எழிலரசி பா.ஜ.க.வில் இணைந்ததாக கூறப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அவர், திருமலைராயன்பட்டினத்தில் போட்டியிடப்போவதாக முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இந்தநிலையில் நேற்று திருமலைராயன்பட்டினத்துக்கு எழிலரசி காரில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்ரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று எழிலரசியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எழிலரசி சார்பில், திருமலைராயன்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தொழில் அதிபரான இவரது 2-வது மனைவி எழிலரசி (வயது 45). இவர் காரைக்கால் நேதாஜிநகரில் வசித்து வருகிறார். எழிலரசி மீது, முன்னாள் அமைச்சர் சிவக்குமார், ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா, திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரை கூலிப் படையை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் பெண் தாதாவாக அவர் வலம் வந்தார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு எழிலரசி, விக்ரமன் ஆகியோர் காரைக்கால் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டினர். இதுதவிர ராதாகிருஷ்ணனின் முதல் மனைவியின் மகன் அஜேஸ்ராமுவை மிரட்டி மதுபான கடை ஒன்றை வாங்கிய வழக்கும் உள்ளது. இந்த வழக்குகளில் எழிலரசி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் எழிலரசி பா.ஜ.க.வில் இணைந்ததாக கூறப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அவர், திருமலைராயன்பட்டினத்தில் போட்டியிடப்போவதாக முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இந்தநிலையில் நேற்று திருமலைராயன்பட்டினத்துக்கு எழிலரசி காரில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்ரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று எழிலரசியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எழிலரசி சார்பில், திருமலைராயன்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






