என் மலர்
செய்திகள்

வாகன சோதனை
சீர்காழி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல்
சீர்காழி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே சூரக்காடு பாலத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரியும், குடிமைப்பொருள் தாசில்தாருமான முருகேசன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், காவலர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழ மூவர்கரை மீனவ கிராமத்தை சேர்ந்த விமல் (வயது35) என்பவர் காரில் சீர்காழியில் இருந்து கீழ மூவர்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார். பறக்கும் படையினர் காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து சீர்காழி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் நாராயணனிடம் ஒப்படைத்தனர்.
Next Story






