என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கொடியம்பாளையம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை படத்தில் காணலாம்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
By
மாலை மலர்15 March 2021 7:37 AM GMT (Updated: 15 March 2021 7:37 AM GMT)

கொடியம்பாளையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கடலோர இந்த தீவு கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு ேமல் ஆகிறது. எனவே இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
மேலும் கட்டிடத்தின் மேல் கூரையின் உள்பகுதியில் காரை பெயர்ந்து காணப்படுகிறது. மழை பெய்தால் மழைநீர் கசிந்து கட்டிடத்தின் உள்ளே தண்ணீர் வருகிறது. இதனால் கட்டிடத்தில் உள்ள கணினி பொறிகள் மற்றும் பதிவேடுகள் நனைந்து பாதிக்க கூடிய நிலையில் உள்ளன.
செயல்பாட்டில் இருந்து வரும் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
