search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களிடம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குறை கேட்ட போது எடுத்த படம்.
    X
    பொதுமக்களிடம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குறை கேட்ட போது எடுத்த படம்.

    பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை- கவர்னர் உறுதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரசு குடியிருப்புகளை பராமரிக்க மத்திய பொதுப்பணித்துறை மேற்கொள்வது போல் ஒரு பொதுத்துறை நிறுவனம் மூலம் இதை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.
    புதுச்சேரி:

    அரசு பொதுப்பணித்துறை சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கருவடிக்குப்பத்தில் பொதுமக்களுக்கு மாசு கலந்த குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்புகள் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கவர்னர் மாளிகைக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து நேற்று காலை கருவடிக்குப்பம் லட்சுமி நகர் அய்யனார் கோவில் வீதிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். அங்குள்ள மேல்நிலை தொட்டியை அவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் மேஜர் சரவணன் நகர், மேட்டுத்தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, ஓடை தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாசு கலந்து செம்மண் நிறத்தில் குடிநீர் வருகிறது. அதை பயன்படுத்த முடியவில்லை என்று கூறி அந்த பகுதி மக்கள் ஒரு பாட்டிலில் தண்ணீரை எடுத்து வந்து காண்பித்தனர்.

    மேலும், இந்த பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான நேரமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஒட்டியுள்ள ஓடையில் கழிவுநீர் கலந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை என்று கூறினர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஒரு திட்ட அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் பல பகுதிகள் மிகவும் மோசமாக உள்ளன. பழைய மின் கட்டமைப்புகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. குடியிருப்புகள் சீரமைக்கப்படுவது இல்லை. எனவே அனைவரும் பாதுகாப்பாக வாழ குடியிருப்புகளை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, அரசு குடியிருப்புகளை பராமரிக்க மத்திய பொதுப்பணித்துறை மேற்கொள்வது போல் ஒரு பொதுத்துறை நிறுவனம் மூலம் இதை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார். தேர்தல் விதிகளுக்கு இணங்க அத்தியாவசிய பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு அவர் சென்றார்.
    Next Story
    ×