என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
திருக்கடையூர் அருகே தூக்குப்போட்டு தச்சு தொழிலாளி தற்கொலை
திருக்கடையூர் அருகே தூக்குப்போட்டு தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே ஆக்கூர் முக்கூட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இ்ங்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது31) என்பவர் மேற்கண்ட வணிக வளாகத்தில் தனி அறையில் தங்கி தச்சு வேலை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் அவருடன் வேலை செய்து வரும் நண்பர் ஒருவர் அவரை வேலைக்கு அழைத்து செல்வதற்காக அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்று கதவை தட்டினார். நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் வணிக வளாக நிர்வாகத்தில் தெரிவித்து அவர்களின் உதவியுடன் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மின் விசிறியில் துணியால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் நேரில் சென்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






