search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்திராயிருப்பு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    X
    வத்திராயிருப்பு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    வத்திராயிருப்பு பகுதியில் தீவிர வாகன சோதனை

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு பகுதியில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள 27 ஊராட்சிகளிலும், 3 பேரூராட்சிகளிலும், முக்கிய சாலை சந்திப்புகளிலும், பஜார் பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வத்திராயிருப்பு தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் முக்கிய சாலைகள், முக்கிய பஜார் வீதிகளில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் குழு கொண்ட பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது அவர்கள் உரிய ஆவணம் இன்றி நகை மற்றும் பணம் எடுத்து செல்லப்படுகிறதா என அவர்கள் ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×