என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் பீரோவை உடைத்து 20 பவுன் நகை - பணம் திருட்டு
Byமாலை மலர்3 March 2021 6:29 PM GMT (Updated: 3 March 2021 6:29 PM GMT)
அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் சொத்து பத்திரங்கள் மற்றும் பீரோவில் இருந்த பட்டுப்புடவைகளை எரித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த தாதம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் பொன்னம்பலம்(வயது 70). இவர் நேற்று மாலை 6 மணி அளவில் சிலால் கிராமத்தில் உள்ள கோவில் விசேஷத்திற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அவர் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றபோது உள்பக்கமாக கதவு தாழிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னம்பலம் வீட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது பின் கதவு திறக்கப்பட்டிருந்தது.
மேலும் வீட்டுக்குள் புகை மண்டலமாக இருந்தது. உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது படுக்கை அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. மேலும் பீரோவில் இருந்த பல்வேறு சொத்து பத்திரங்கள், பட்டுப்புடவைகள் ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தி விட்டு மர்ம நபர்கள் நகை- பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினரை அவர் உதவிக்கு அழைத்து, படுக்கை அறையில் மேலும் தீ பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தார். இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டதுடன், சொத்து பத்திரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த தாதம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் பொன்னம்பலம்(வயது 70). இவர் நேற்று மாலை 6 மணி அளவில் சிலால் கிராமத்தில் உள்ள கோவில் விசேஷத்திற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அவர் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றபோது உள்பக்கமாக கதவு தாழிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னம்பலம் வீட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது பின் கதவு திறக்கப்பட்டிருந்தது.
மேலும் வீட்டுக்குள் புகை மண்டலமாக இருந்தது. உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது படுக்கை அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. மேலும் பீரோவில் இருந்த பல்வேறு சொத்து பத்திரங்கள், பட்டுப்புடவைகள் ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தி விட்டு மர்ம நபர்கள் நகை- பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினரை அவர் உதவிக்கு அழைத்து, படுக்கை அறையில் மேலும் தீ பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தார். இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டதுடன், சொத்து பத்திரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X