search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன சோதனை
    X
    வாகன சோதனை

    சாத்தூர் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

    சாத்தூர் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    சாத்தூர்:

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சாத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

    இந்தநிலையில் இந்த பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் முதற்கட்டமாக ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    சாத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் புஷ்பா தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள் சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ராஜா ஹுசைன் ஆகியோர் மேற்பார்வையில் 3 நிலையான ஆய்வுக்குழு மற்றும் 3 பறக்கும் படை குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சாத்தூர் சட்டமன்ற தொகுதியான சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் மொத்தம் 283 வாக்குச்சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்கள் பரிசோதனை செய்யப்படுகிறது.

    சாத்தூர் அருகே சிவகாசி ரோட்டில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் லியாகத் அலிகான் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பிதுரை ஆகியோர் கொண்ட குழுவினர் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×