search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படகு போட்டி
    X
    படகு போட்டி

    திருக்கடையூர் அருகே சின்னமேட்டில் படகு போட்டி

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே சின்னமேட்டில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று மாசிமக திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் படகு போட்டி நடைபெற்றது.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே சின்னமேட்டில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாசிமக திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் படகு போட்டி நடைபெற்றது. இதில் 25 படகுகளும், ஒவ்வொரு படகிற்கும் 3 மீனவர்கள் வீதம் கலந்து கொண்டனர். கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் எல்லையில் படகு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். அந்த படகில் இருப்பவர்களிடம் இருந்து போட்டியில் கலந்து கொள்பவர்கள் கொடியை பெற்று திரும்பி கரைக்கு வரவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று காலை 10 மணிக்கு படகு போட்டி தொடங்கியது. பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.7 ஆயிரத்து 500-ம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரமும், 4-வது பரிசு ரூ.4 ஆயிரமும், 5-வது பரிசு ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டன.

    இதனை மீனவ கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சின்னமேடு ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×