என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் நடத்தை விதிகள் அமல்- புதுவையில் மதுபான விற்பனை ஒரு மணி நேரம் குறைப்பு
Byமாலை மலர்27 Feb 2021 5:16 AM GMT (Updated: 27 Feb 2021 5:16 AM GMT)
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது.
மேலும் மது விற்பனை நேரமும் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. புதுவையில் காலை 9 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்படும். இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தது.
தற்போது இரவு 10 மணி வரை மட்டுமே திறந்து இருக்க வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மதுபான கடைகள், ‘கள்’ மற்றும் சாராய கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்.
இதேபோல் மதுபானங்களை அனுமதி பெற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்.
மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எந்த இடத்திலும் வைத்திருக்க கூடாது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுவை சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது.
மேலும் மது விற்பனை நேரமும் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. புதுவையில் காலை 9 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்படும். இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தது.
தற்போது இரவு 10 மணி வரை மட்டுமே திறந்து இருக்க வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மதுபான கடைகள், ‘கள்’ மற்றும் சாராய கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்.
இதேபோல் மதுபானங்களை அனுமதி பெற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்.
மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எந்த இடத்திலும் வைத்திருக்க கூடாது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X