என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
விருதுநகர் மாவட்டத்தில் 35 சதவீத பஸ்கள் இயக்கம்- பொதுமக்கள் தவிப்பு
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற பஸ்கள் டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 355 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று 125 பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன.
விருதுநகரில் 72 பஸ்களில் 12 வெளியூர் பஸ்கள் மற்றும் 8 டவுன் பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன.
ராஜபாளையத்தில் உள்ள அரசு பேருந்து போக்குவரத்து கழகம் பணிமனையில் உள்ளே 100 பேருந்துகளில் 7 மட்டுமே இயக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர். முக்கியமான பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பஸ்களை எடுப்பதற்காக இன்று பணிமனைக்கு வந்தனர். அவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பஸ்களை எடுக்க விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற பஸ்கள் டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் கிராமப்புற மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் கட்டிட தொழிலாளர்கள், ஊழியர்கள் பஸ்கள் கிடைக்காமல் அவதியடைந்தனர்.
இன்று முகூர்த்த தினம் என்பதால் பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் பஸ்கள் கிடைக்காததால் குறித்த நேரத்தில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் தவித்தனர்.
பஸ்கள் ஓடாததால் ஷேர் ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஆட்டோக்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 355 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று 125 பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன.
விருதுநகரில் 72 பஸ்களில் 12 வெளியூர் பஸ்கள் மற்றும் 8 டவுன் பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன.
ராஜபாளையத்தில் உள்ள அரசு பேருந்து போக்குவரத்து கழகம் பணிமனையில் உள்ளே 100 பேருந்துகளில் 7 மட்டுமே இயக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர். முக்கியமான பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பஸ்களை எடுப்பதற்காக இன்று பணிமனைக்கு வந்தனர். அவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பஸ்களை எடுக்க விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற பஸ்கள் டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் கிராமப்புற மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் கட்டிட தொழிலாளர்கள், ஊழியர்கள் பஸ்கள் கிடைக்காமல் அவதியடைந்தனர்.
இன்று முகூர்த்த தினம் என்பதால் பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் பஸ்கள் கிடைக்காததால் குறித்த நேரத்தில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் தவித்தனர்.
பஸ்கள் ஓடாததால் ஷேர் ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஆட்டோக்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.
Next Story






