என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சுழியில் புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஆய்வு
Byமாலை மலர்20 Feb 2021 1:06 PM GMT (Updated: 20 Feb 2021 1:06 PM GMT)
திருச்சுழியில் புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா ஆய்வு செய்தார்.
காரியாபட்டி:
திருச்சுழியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வக்கீல்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சுழியில் நீதிமன்றம் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் புதிதாக திருச்சுழியில் திறக்கப்பட்ட நீதிமன்றத்தை விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு வழக்கறிஞர்களிடையே விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா பேசியதாவது:-
திருச்சுழியில் திருமேனி நாதர் கோவிலின் பின்பு நீதிமன்றம் அமையப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய சிறப்பாகும். வழக்கறிஞர்கள் சிறப்பாக பணியாற்றி வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரியாபட்டியில் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் செல்லையா கோரிக்கை வைத்தார். காரியாபட்டியில் விரைவில் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி முத்துசாரதா கூறினார்.
இதில் மாவட்ட கூடுதல் நீதிபதி பரிமளம், சரண், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன், அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வேங்கட லட்சுமி, கூடுதல் மாவட்ட நீதிபதி சுபாஷினி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை, திருச்சுழி நீதிமன்ற நீதிபதி அபர்னா உள்பட 21 நீதிபதிகள், அருப்புக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன், பொருளாளர் சீனிவாசன், அரசு வழக்கறிஞர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X