என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கிரமங்கலம் அருகே கோவிலில் காணாமல் போன அனுமன் சிலை மீட்பு
Byமாலை மலர்19 Feb 2021 2:17 PM GMT (Updated: 19 Feb 2021 2:17 PM GMT)
விக்கிரமங்கலம் அருகே கோவிலில் காணாமல் போன அனுமன் சிலையை கிணற்றில் இருந்து போலீசார் மீட்டனர். அந்த சிலையை கிணற்றில் போட்டது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் இருந்த கல்லால் ஆன சுமார் ஒரு அடி உயரமுள்ள அனுமன் சிலையை காணவில்லை.
இது குறித்து இக்கோவில் நிர்வாகத்தின் செயல் அலுவலர் சரவணன், விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், அந்த சிலையை தேடும் பணியை மேற்கொண்டனர்.
நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில், அந்த சிலையை தேடும் முயற்சியை மேற்கொண்டனர். கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு உள்ளே இறங்கி தேடி பார்த்தபோது, அனுமன் சிலை சேற்றில் சிக்கிக்கிடந்தது, தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலையை, கிணற்றுக்குள் இருந்து சிலையை மீட்டு தூய்மைப்படுத்தி அபிஷேகம் செய்து, அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைத்தனர். மேலும் அந்த சிலையை கிணற்றுக்குள் போட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு காணாமல் போன அனுமன் சிலையை கண்டுபிடித்த, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் இருந்த கல்லால் ஆன சுமார் ஒரு அடி உயரமுள்ள அனுமன் சிலையை காணவில்லை.
இது குறித்து இக்கோவில் நிர்வாகத்தின் செயல் அலுவலர் சரவணன், விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், அந்த சிலையை தேடும் பணியை மேற்கொண்டனர்.
நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில், அந்த சிலையை தேடும் முயற்சியை மேற்கொண்டனர். கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு உள்ளே இறங்கி தேடி பார்த்தபோது, அனுமன் சிலை சேற்றில் சிக்கிக்கிடந்தது, தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலையை, கிணற்றுக்குள் இருந்து சிலையை மீட்டு தூய்மைப்படுத்தி அபிஷேகம் செய்து, அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைத்தனர். மேலும் அந்த சிலையை கிணற்றுக்குள் போட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு காணாமல் போன அனுமன் சிலையை கண்டுபிடித்த, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X